அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி மஹா விஷ்ணுவின் ஹ்ருதயத்தில் வாசம் செய்கின்றாள். உலகத்தை இயக்கி நடத்தும் திருமாலுக்கு ஜீவநாடி சக்தியாக திகழ்பவள். ஐயனின் ஒவ்வொரு அவதாரத்திலும் உடன் இருப்பவள். குறைவில்லா செல்வம், உணவு, ஆரோக்கியம் அமைதி, அழகு, வெற்றி, போன்ற அனைத்தும் - 'லக்ஷ்மி கடாக்ஷம்' என்று ஒற்றைப் பதத்தில் தன்னகத்தே வைத்து பக்தர்களுக்கு அருளும் அன்னை. ஸ்ரீ மஹா லக்ஷ்மி வழிபாடு வறுமை நீக்கி செல்வம் தருவதோடு மட்டுமல்லாமல் மேலே சொன்ன எல்லாவற்றையும் பெற்றுத் தரும். அன்னையின் முக்கிய ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் சேகரித்து ஒலி மற்றும் எழுத்து வடிவில் தந்திருக்கிறோம். படிப்பதற்கு ஏதுவாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கியுள்ளோம். இதை தினசரி பூஜையிலும், முக்கியமாக வெள்ளிக்கிழமை பூஜையிலும் பாராயணம் செய்வது சிறந்த பயன் தரும்.
ஓம் ஸ்ரீ மஹா லக்ஷ்மி தாயே போற்றி!
Click here to download the app
No comments:
Post a Comment